மது குடித்த கார் டிரைவர் பலி


மது குடித்த கார் டிரைவர் பலி
x

புதுச்சேரி மூலக்குளம் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த கார் டிரைவர் பலியானது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்குளம்

புதுச்சேரி பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல் முருகன் (வயது 46). கார் டிரைவர். அவரது மனைவி கிருஷ்ணம்மாள் (39). சக்திவேல்முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சக்திவேல் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

--------


Next Story