முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

பாகூர் அருகே நோயால் அவதிப்பட்ட வந்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்

பாகூர் புது நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாயவன் (வயது 79). இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். மாயவன் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோயின் தாக்கம் குறையவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story