முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே விபத்தினால் ஏற்பட்ட காயத்தால் மனமுடைந்த முதியவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியங்குப்பம்

புதுச்சேரி தவளக்குப்பம் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் தங்கதுரை (வயது 65). இவர் தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும் பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வந்துள்ளார். சரிவர பார்வை தெரியாததால் கடந்த 1 வாரத்திற்கு முன்பு வீட்டு வாசலில் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அதில் அவரது வலது காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் காரணமாக காலில் மாவு கட்டு போட்டுள்ளதால் நடக்க முடியாமல் படுத்த நிலையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டின் ஒரு அறையில் உள்ள ஜன்னல் கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தவளக்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்றார். தற்கொலை செய்து கொண்ட தங்கத்துரைக்கு, புண்ணியவதி என்ற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.


Next Story