முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

புதுச்சேரியில் மதுகுடிக்க பணம் தராததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி

புதுவை கொம்பாக்கம்பேட் குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 64). புரோட்டா மாஸ்டராக வேலைபார்த்த இவர் கொரோனாவுக்கு பிறகு வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், கழிப்பறையில் வழுக்கி விழுந்ததால் இடதுகாலில் அடிப்பட்டு மாவு கட்டு போடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அவர் தனது மனைவி சுகுணாதேவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் துணிகளுக்கு கறை எடுக்க பயன்படுத்தும் திரவத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story