தவறி விழுந்த தொழிலாளி சாவு


தவறி விழுந்த தொழிலாளி சாவு
x

பாகூர் அருகே நடைபயிற்சியின் போது தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

பாகூர்

பாகூர் அடுத்த குருவிநத்தம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 52). கூலித்தொழிலாளி. அவரது மனைவி தேவகி. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். நேற்று காலை தாமோதரன் நடைபயிற்சி சென்றார். அப்போது அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாமோதரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story