விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

தவளக்குப்பம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அருகே உள்ள பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேலு (வயது 53). விவசாயி. இவரது மனைவி ரதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளாக குழந்தைவேலு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

சம்பவத்தன்று இரவு குழந்தைவேலு தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். ஆனால் அவர் சற்று நேரமாகும் என்று தொிவித்துள்ளார். இதனால் கோபித்து கொண்டு வீட்டை விட்டு குழந்தைவேலு வெளியேறினார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் குழந்தைவேலு விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story