தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 22 Nov 2022 5:56 PM GMT (Updated: 22 Nov 2022 6:02 PM GMT)

குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி

முத்தியால்பேட்டை வாழைக்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 28). தொழிலாளி. இவருடைய மனைவி அஞ்சலி (25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணேசுக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது வந்தது.

நேற்று முன்தினம் இரவு கணேஷ் வழக்கம் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அஞ்சலி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story