தூக்குப்போட்டு பெண் தற்கொலை

சமையலறையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி
முத்தியால்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ். ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலி (வயது 25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணேசுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அஞ்சலி சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





