தூக்குப்போட்டு பெண் தற்கொலை

புதுவை மேஸ்தி வீதி அருகே கடும் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி
புதுவை மேஸ்தி வீதியை சேர்ந்தவர் விஜயன் (வயது53).மின்துறை ஊழியர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் ரேவதி கடந்த சில தினங்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை ரேவதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





