பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காலாப்பட்டு அருகே பெண் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலாப்பட்டு

காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பழனி (வயது 40). இவருக்கும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த ரஞ்சிதா என்பவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

பழனி சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அவர் ரஞ்சிதாவுடன் செல்போனில் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். அவ்வாறு கடந்த சில நாட்களுக்கு முன் பேசியபோது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரஞ்சிதா, இன்று காலை வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் பலனின்றி ரஞ்சிதா பரிதாபமாக இறந்துபோனார்.

இது குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story