தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

புதுவையில் மூட்டு வலியால் அவதிப்பட்ட பெண் தூக்குப்பபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி

முதலியார்பேட்டை விடுதலை நகரை சேர்ந்தவர் தில்லை நடராஜன். அவரது மனைவி காமினி ஜெயகுமாரி (வயது 53). இவர் கடந்த சில ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிபட்டதாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story