தூக்குப்போட்டு பெண் தற்கொலை

புதுவை சாரம் அய்யப்பன் நகரில் ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்ப்பட்டதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்
புதுச்சேரி
புதுவை சாரம் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் குமரன். கொத்தனார். இவரது மனைவி தேவகி (வயது 44). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தேவகி ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் தேவகி மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது அவரது அறையில் மின் விசிறியில் புடவையில் தூக்குப்போட்டு தேவகி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





