தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

முத்தியால்பேட்டையில் மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முத்தியால்பேட்டை

முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் லாரன்ஸ்ராஜ் (வயது 34). தொழிலாளி. அவரது மனைவி மரிஜோஸ்பீன் (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். லாரன்ஸ்ராஜிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று காலை லாரன்ஸ்ராஜ் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை அவரது மனைவி கண்டித்தார். இந்தநிலையில் வீட்டில் உள்ள அறையில் லாரன்ஸ்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story