தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
நோய் கொடுமையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நெட்டப்பாக்கம்
நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டசோழநல்லூர் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). கூலி தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆணிப்பாத நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் வேலைக்கு செல்ல சிரமப்பட்டு வந்தார்.
கால் வலியால் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story