தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்

பாகூர் அடுத்த கன்னியக்கோவில் மதிகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 45). கூலித்தொழிலாளி. அவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நந்தகோபாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி மகேஸ்வரி கண்டித்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story