போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பி ஓடிய வாலிபர்
திருக்கனூர் அருகே கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பி ஓடிய நபரை வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.
திருக்கனூர்.
திருக்கனூர் அருகே உள்ளமண்ணாடிப்பட்டு கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில், மண்ணாடிப்பட்டு மேட்டு தெருவை சேர்ந்தவர் செந்தில் என்கிற விஜயகுமார் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து திருக்கனூர் போலீஸ்காரர் வினோத்குமார் என்பவரிடம் வீண் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீஸ்காரர் வினோத்குமாரை பிடித்து தள்ளி தாக்கி விட்டு செந்தில் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பி ஓடிய செந்திலை வலை வீசி தேடி வருகின்றனர்
Related Tags :
Next Story