புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி


புனித ஆரோக்கிய அன்னை ஆலய  ஆடம்பர தேர்பவனி
x

அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி இன்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி இன்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

ஆண்டு திருவிழா

அரியாங்குப்பத்தில் பிரசித்திபெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 333-வது ஆண்டு திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் திருப்பலி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடந்தது.

முன்னதாக மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி தலைமையில் சிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னை சொரூபம் ஆடம்பர தேரில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து தேர்பவனியை தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர்,முதன்மை குரு குழந்தைசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தேர் பவனி

மாதா கோவில் வீதி, பழைய பூர்ணாங்குப்பம் ரோடு, சாமிநாத நாயக்கர் வீதி, கடலூர் சாலை வழியாக தேர்பவனி வந்தது. இதில் அரியாங்குப்பம் சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி புதுவை, கடலூர் பகுதியை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணிரோச் தலைமையில் அரியாங்குப்பம் பங்கு நிர்வாக குழு பொறுப்பாளர்கள் ரெனேலூர்துசாமி, அந்தோணிராஜ், மில்கி மற்றும் பங்கு மக்கள், தன்னார்வலர்கள் குழுவினர் செய்திருந்தனர்.


Next Story