அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

புதுச்சேரி

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஒதியஞ்சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர்கள் சண்.குமாரவேல், செந்தில்குமார், ஏ.கே.குமார், அமுதாகுமார், பொருளாளர் லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், ஜே.வி.எஸ். சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க.

கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலையில் உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், நடராஜன், இணை செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், திருநாவுக்கரசு, துணைத்தலைவர் ராஜாராமன், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர்கள் அன்பழக உடையார், மாநில துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி, கணேசன், காந்தி, ஜெயசேரன், நாகமணி, மணவாளன், குமுதன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முத்தியால்பேட்டையில் மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் குணசேகரன், விக்னேஷ், காசிநாதன், பழனிசாமி, கோபால், தர்மலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அ.ம.மு.க.

அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. யூ.சி.ஆறுமுகம், திராவிடர் கழக மாநில தலைவர் சிவ.வீரமணி, புதிய நீதிக்கட்சி மாநில தலைவர் பொன்னுரங்கம் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story