மனித சங்கிலி போராட்டம்


மனித சங்கிலி போராட்டம்
x

புதுச்சேரி

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், ம.தி.மு.க. பொறுப்பாளர் கபிரியேல், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காந்தி பிறந்தநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், மதவெறிக்கு எதிராகவும் அண்ணா சிலை முதல் காமராஜர் சிலை வரை மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.


Next Story