தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

புதுச்சேரியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி

உருளையன்பேட்டை முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 27). தொழிலாளி. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story