தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

புதுச்சேரியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி
உருளையன்பேட்டை முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 27). தொழிலாளி. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





