லாரி டிரைவர் திடீர் சாவு


லாரி டிரைவர் திடீர் சாவு
x

புதுவை பெரிய மார்க்கெட் வந்த போது லாரி டிரைவர் திடீரென மயங்கி உயிரிழந்தார்.

புதுச்சேரி

தேனி தாமரைகுளத்தை சேர்ந்தவர் முகமது (வயது45). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் வேலை நிமித்தம் காரணமாக புதுவைக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை புதுவை பெரிய மார்க்கெட்டிற்கு வந்தபோது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முகமது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story