மருத்துவ பரிசோதனை முகாம்


மருத்துவ பரிசோதனை முகாம்
x

புதுவை தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

புதுச்சேரி

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தவளக்குப்பம் முத்து முதலியார் நகரில் இன்று மருத்துவ முகாம் நடந்தது. சபாநாயகர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்கள் ராமு கிருஷ்ணமூர்த்தி, சக்திபாலன், சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் ராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story