தொழில் முனைவோருக்கான கூட்டம்


தொழில் முனைவோருக்கான கூட்டம்
x

காரைக்காலில் ஜி.எஸ்.டி. ஆணையர் தலைமையில் தொழில் முனைவோருக்கான கூட்டம் நடைப்பெற்றது.

திருநள்ளாறு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான கூட்டம், காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, ஜி.எஸ்.டி. ஆணையர் பத்மஸ்ரீ தலைமை தாங்கினார். கூடுதல் ஆணையர் பிரசாந்த் குமார் காகர்லா, துணை ஆணையர் தினேஷ், காரைக்கால் சேம்பேர் ஆப் காமர்ஸ் தலைவர் அறிவழகன் மற்றும் காரைக்காலை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜி.எஸ்.டி. நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்ட சமீபத்தைய மாற்றங்கள் குறித்து விளக்கப்பட்டன. மேலும், ஜி.எஸ்.டி. வரி செலுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய அரசு அறிவித்து உள்ள "எனது பில், எனது அதிகாரம்" என்ற திட்டம், விளக்க படம் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் தொழில் முனைவோரின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.


Next Story