அரசு பள்ளியில் அமைச்சர் சந்திர பிரியங்கா திடீர் ஆய்வு


அரசு பள்ளியில் அமைச்சர் சந்திர பிரியங்கா திடீர் ஆய்வு
x

காரைக்கால் அரசு பள்ளியில் அமைச்சர் சந்திர பிரியங்கா ஆய்வு மேற்கொண்டார்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், அமைச்சர் சந்திரபிரியங்கா நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியர்கள் வருகை பதிவேடு, வகுப்பறை, மைதானம், மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர், கழிவறை மற்றும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்த அமைச்சர் பள்ளிக்கு வந்திருந்த, ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பள்ளியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார். மேலும் வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் சந்திர பிரியங்கா உறுதி அளித்தார். இதில் காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story