கல்லூரி மாணவி மாயம்


கல்லூரி மாணவி மாயம்
x

லாஸ்பேட்டை வாசன் நகரை சேர்ந்த கல்லூரி மாணவியை மாயமாகியுள்ள்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்குளம்

லாஸ்பேட்டை வாசன் நகரை சேர்ந்தவர் சுந்தரம். அவரது மகள் லாவண்யா (வயது 20). இவர் ரெட்டியார்பாளையம் சுதாகர் நகர் பகுதியில் தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து மூலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற லாவண்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான லாவண்யாவை தேடி வருகின்றனர்.


Next Story