1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x

`தேஜ்' புயல் காரணமாக புதுவையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த 19-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. பின்னர் இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு `தேஜ்' என பெயரிடப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இது மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த புயல் காரணமாக புதுவை துறைமுகத்தில் இன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல காரைக்கால் துறைமுகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ்கடல் மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.


Next Story