திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் விஷம் குடித்து சாவு

திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் விஷம் குடித்து உயிரிழந்தார். மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கனூர்
திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் விஷம் குடித்து உயிரிழந்தார். மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ்காரர்
புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது42). இவர் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற போலீஸ்காரர்கள் அரிகிருஷ்ணனை மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
விஷம் குடித்து சாவு
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, அரிகிருஷ்ணன் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அரிகிருஷ்ணன் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
பணிச்சுமை காரணமாக அரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா?. அல்லது குடும்ப பிரச்சினையில் இந்த முடிவை மேற்கொண்டாரா? என்பது தெரியவில்லை.
குடும்பம்
தற்கொலை செய்து கொண்ட அரிகிருஷ்ணனுக்கு பிரபாவதி (32) என்ற மனைவியும், ஹரிபிரசாத் (15), பிரத்தீஷ்குமார் (13) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இது குறித்து திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.