தனியார் நிறுவன ஊழியர் பலி


தனியார் நிறுவன ஊழியர் பலி
x

ஸ்கூட்டர்-கார் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

மரக்காணம்

மரக்காணத்தை சே்ாந்தவர் சுமன் (வயது 38). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர். இன்று காலை ஸ்கூட்டரில் வேலைக்கு புறப்பட்டார். அவருடன் உறவினர் நீலா (62) என்பவரும் சென்றார். மரக்காணம் -புதுச்சேரி கடற்கரை சாலையில் பாரதிநகர் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் ஒன்று ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த சுமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் நீலா காயங்களுடன் உயிருக்கு போராடினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காயங்களுடன் தவித்த நீலாவை மீட்டு சிகிச்சைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான சுமனின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story