தனியார் பள்ளி ஊழியர் திடீர் சாவு


தனியார் பள்ளி ஊழியர் திடீர் சாவு
x

மூலக்குளம் அருகே தனியார் பள்ளி ஊழியர் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்குளம்

மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் அன்பரசன் (வயது36). தனியார் பள்ளி ஊழியர். இந்தநிலையில் அன்பரசன் நேற்று வேலையை முடித்துவிட்டு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென அன்பரசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை நண்பர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story