போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x

திருபுவனை அருகே ஜோசப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா:போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருபுவனை

திருபுவனை அருகே திருவண்டார்கோவில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மிஸ்டிகன் ஆண்டோ ரிச்சர்ட் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ரமேஷ் வரவேற்றார்.

விழாவையொட்டி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story