ஆட்டோ சவாரிக்கு புதிய செயலியை அறிமுகப்படுத்த புதுச்சேரி அரசு திட்டம்


ஆட்டோ சவாரிக்கு புதிய செயலியை அறிமுகப்படுத்த புதுச்சேரி அரசு திட்டம்
x

கோப்புப்படம் 

மொபைல் செயலியின் மூலம் ஒழுங்கான முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

ஆட்டோ சவாரிக்கான ஒழுங்கற்றக் கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களைக் குறைக்க புதுச்சேரி போக்குவரத்துத்துறை ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த மொபைல் செயலியின் மூலம் ஒழுங்கான முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு ஆட்டோ ஓட்டுநர்களுக்குச் சமமான ஊதியம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பான மற்றும் நியாயமான முறையில் ஆட்டோ சவாரிகள் நடைபெறும் என போக்குவரத்துத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.


Next Story