17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்


17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
x

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரம்

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி (வயது 21). இவருக்கும், காரைக்காலை சேர்ந்த 17 வயது உறவுக்கார சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் துரைபாண்டி தனது ஊரான பெரம்பூருக்கு சிறுமியை அழைத்துள்ளார். அதன் பேரில் அங்கு சென்று சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைவார்த்தை கூறி துரைபாண்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

வாலிபர் கைது

இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் அம்பகரத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைபாண்டியை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story