பிற துறைகளின் பொறுப்புகளில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் விடுவிப்பு


பிற துறைகளின் பொறுப்புகளில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் விடுவிப்பு
x

பிற துறைகளின் பொறுப்புகளில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

புதுச்சேரி

பிற துறைகளின் பொறுப்புகளில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

தேர்தல் ஆணையம் கடிதம்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

தேர்தல் பணிகளை மேற்கொள்ள வசதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிகளை பிற பொறுப்புகளில் இருந்து விடுவிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரி

அதன்படி புதுவை தலைமை தேர்தல் அதிகாரியான ஜவகர் பிற பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். அவர் முழுமையாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்.

ஜவகர் வகித்து வந்த நிதி, தொழில் மற்றும் வணிகம், கல்வி மற்றும் துறைமுகம் ஆகிய துறைகள் புதுவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆசிஷ் மாதராவ் மோர்-க்கு தற்காலிகமாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதற்கான உத்தரவினை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.


Next Story