கவிஞர் வாணிதாசன் சிலைக்கு மரியாதை


கவிஞர் வாணிதாசன் சிலைக்கு மரியாதை
x

புதுச்சேரி அரசு சார்பில் கவிஞர் வாணிதாசன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு சார்பில் கவிஞர் வாணிதாசன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு சபாநாயகர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி, அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story