ரவுடியின் மனைவி தற்கொலை முயற்சி


ரவுடியின் மனைவி தற்கொலை முயற்சி
x

புதுச்சோியில் கத்தியால் கையை அறுத்துக்கொண்டு ரவுடி மனைவி தற்கொலைக்கு முயன்றார்.

புதுச்சேரி

புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் புகுந்து கடைகளை சூறையாடினார்கள். இதுதொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீசை தேடி வந்தனர்.இந்தநிலையில் ரவுடியின் மனைவி போலீசார் தொல்லை கொடுப்பதாக கூறி கையை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story