குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை


குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை
x

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து வழங்கினார்

புதுச்சேரி

புதுச்சேரியில் கடந்த (2022-23) பட்ஜெட் கூட்டத் தொடரில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 21 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களில் அரசின் திட்டத்தில் எந்த உதவியும் பெறாதவர்களை தேர்ந்தெடுத்து மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒப்புதல் அளித்து, கடந்த மாதம் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக முத்தியால்பேட்டை தொகுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு தேர்வான இல்லத்தரசிகளுக்கு காசோலைகளை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் வழங்கினார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story