பூலோக மாரியம்மன் கோவில் செடல் உற்சவம்


பூலோக மாரியம்மன் கோவில் செடல் உற்சவம்
x

பாகூரில் பூலோக மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நடைப்பெற்றது.

பாகூர்

பாகூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூலோக மாரியம்மன் கோவில் ஆடி மாத செடல் உற்சவம் கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வீதிஉலா நடந்து வந்தது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் நேற்று நடந்தது. பின்னர், பூலோக மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் செடல் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

1 More update

Next Story