தந்தையை தாக்கிய மகன் கைது

காரைக்காலில் தாய் மற்றும் தந்தை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
காரைக்காலை அடுத்த நிரவி பூசை மண்டபம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 85). அவரது மனைவி இந்திராணி. இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் 4-வது மகன் கலியமூர்த்தி தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் கலியமூர்த்தி தனது தாய் இந்திராணியை கல்லால் அடித்து தாக்கியதாக நிரவி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்று ஜாமீனில் வெளியே வந்த அவர், தந்தை காளிமுத்துவையும் கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை மீண்டும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story






