போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை
வில்லியனூர் அருகே போலீஸ் ஏட்டு நோய் கொடுமையால் மனமுடைந்த தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வில்லியனூர்
நோய் கொடுமையால் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உடல்நிலை பாதிப்பு
வில்லியனூர் ஜி.என்.பாளையம் அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு வள்ளி (50) என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
உடல்நிலை பாதித்து கடந்த ஒரு மாதமாக மருத்துவ விடுப்பில் சக்திவேல் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. நோய் கொடுமையால் மனமுடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு மாடி படிக்கட்டு கைப்பிடியில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குடும்பத்தினர் கதறல்
இந்தநிலையில் இன்று காலை மனைவி வள்ளி எழுந்து பார்த்தபோது, கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
இதுபற்றி வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் விரைந்து வந்து சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.