கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

திருக்கனூரில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே சோம்பட்டு ஏரிக்கரை பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரை சோதனை செய்தபோது, சட்டை பையில் 300 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் உருளையன்பேட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சன் (வயது24) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story