சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
காரைக்கால்
காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியை சேர்ந்த 4-ம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். 2020-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் நெடுங்காடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தனர்.
இந்த வழக்கு காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, குற்றம்சாட்டப்பட்ட ஜெயராமனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story