ரெயில்முன் பாய்ந்து இறந்தவர் ஆன்லைன் வர்த்தகர்


ரெயில்முன் பாய்ந்து இறந்தவர் ஆன்லைன் வர்த்தகர்
x

புதுச்சேரி கம்பன் நகர் அருகே ஆன்லைன் வர்த்தகதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி-

புதுச்சேரி கம்பன் நகர் ரெயில்வே தண்டவாளம் அருகே நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கிடந்தார். இது குறித்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ரெட்டியார்பாளையம் கம்பன் நகரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் கந்தன் என்பவரது மகன் உதயகுமார் (வயது 45) என்பது தெரியவந்தது.மேலும், உதயகுமார் ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்தார். அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். பின்னர் வளவனூரில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த நிலையில் தனது குழந்தைகளுக்கு எதுவும் சேர்த்து வைக்கவில்லையே என புலம்பி அழுதார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தினர். இந்த நிலையில் அவர் நேற்று ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


Next Story