காய்கறி, பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு


காய்கறி, பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது.

புதுச்சேரி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது.

காய்கறி விலை உயர்வு

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்கி மகிழ்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளதால் நடுத்தர மக்கள் சற்று வேதனையில் உள்ளனர்.

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் 2 நாட்களுக்கு முன்பு ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம் நேற்று ரூ.100-க்கு விற்பனையானது.

பழைய விலை அடைப்புக்குறிக்குள் வருமாறு. ஒரு கிலோ கேரட் ரூ.100 (ரூ.80), பீன்ஸ் ரூ.100 (ரூ.80), இஞ்சி ரூ.100 (ரூ.75) விலை உயர்ந்திருந்தது.

பூண்டு- ரூ.100, கோஸ்- 40, தக்காளி -30, கத்தரிக்காய் -60, மிளகாய்-60, உருளைக்கிழங்கு - 40-க்கும் விற்பனையானது. 2 வாழை இலை ரூ.10-க்கும், வாழைக்காய் ஒன்று ரூ.10 முதல் 15-க்கும், தேங்காய் ரூ.25 முதல் 30-க்கும் விற்பனையானது.

பூக்கள்

பூக்கள் விலையும் விலையும் உயர்ந்திருந்தது. ரூ.600-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று ரூ.1,000-க்கு விற்பனையானது. ஒரு கிலோ அரும்பு - ரூ1,000, சாமந்தி - ரூ200, ரோஜா -ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.

காய்கறி, பூக்கள் விலை தீபாவளி பண்டிகை முடிந்த பின் மீண்டும் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story