வாலிபர் திடீர் சாவு


வாலிபர் திடீர் சாவு
x

ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் திடீர் சாவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனூர்

வில்லியனூரை அடுத்த ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பவதி (வயது 59). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஆனந்த், அருண்குமார், வசந்த் ஆகிய 3 மகன்கள்.

வசந்த்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்தபோது அவருக்கு மஞ்சள் காமாலை இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் வசந்த்துக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த டாக்டர்கள், வசந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story