தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு


தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு
x

முலக்குளத்தில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் பணம், வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மூலக்குளம்

புதுச்சேரி மூலக்குளம் திருமலை தாயார் நகரை சேர்ந்தவர் வேலாயுதம். தனியார் நிறுவன அதிகாரி. இவரது மனைவி காயத்ரி (வயது 41). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முன்தினம் காலை வழக்கம் போல் வேலாயுதம் வேலைக்கு சென்று விட்டார். காயத்ரி தனது மகளை கல்லூரிக்கு அனுப்புவதற்காக பஸ் ஏற்றி விட சென்றார்.

பின்னர் உடற்பயிற்சி முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காயத்ரி உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 13 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது.

இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெள்ளி பொருட்கள், பணம் திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story