பெண் தீக்குளித்து சாவு


பெண் தீக்குளித்து சாவு
x

கணவரை பிரிந்த வேதனையில் 3 முறை தற்கொலைக்கு முயன்ற பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

திருபுவனை

கணவரை பிரிந்த வேதனையில் 3 முறை தற்கொலைக்கு முயன்ற பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

கருத்துவேறுபாடு

திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் வி.பி.சி. நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகள் கலைச்செல்விக்கும் (வயது 37), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இளங்கோ என்பவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கலைச்செல்வி கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கணவர் பிரிந்து சென்றதால் வேதனையில் இருந்த கலைச்செல்வி ஏற்கனவே 3 முறை தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது தாயார் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து காப்பாற்றினார். இருப்பினும் கணவரின் நினைவால் அவர் சோகத்துடன் இருந்து வந்தார்.

தீக்குளித்து தற்கொலை

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கலைச்செல்வி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் வலி தாக்க முடியாமல் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கலைச்செல்வி இறந்துபோனார். இது குறித்து அவரது தாய் ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story