தீக்குளித்த தொழிலாளி சாவு


தீக்குளித்த தொழிலாளி சாவு
x

மனைவியை மிரட்டுவதற்காக டீசலை உடலில் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

மூலக்குளம்

மனைவியை மிரட்டுவதற்காக டீசலை உடலில் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கூலித்தொழிலாளி

ரெட்டியார்பாளையம் முத்துபிள்ளைபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 47). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பெருமாளுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் சம்பவத்தன்றும் பெருமாளுக்கும், கவுரிக்கும் தகராறு ஏற்பட்டது. மனைவியை மிரட்டுவதற்காக தனது உடலில் டீசலை ஊற்றி, தீயை பற்ற வைத்தார். இதில் எதிர்பாராத விதமாக உடலில் தீ பற்றிக்கொண்டது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கவுரி, கணவரை காப்பாற்றுமாறு அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, பெருமாள் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். உடல் கருகிய நிலையில் இருந்த அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story