புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x

கோடை விடுமுறையை முன்னிட்டு புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

புதுச்சேரி

கோடை விடுமுறையை முன்னிட்டு புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

பாரதி பூங்கா

புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே இன்று புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நகர பகுதியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முழுவதும் நேற்று நிரம்பி வழிந்தன. வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் காலையில் பாரதி பூங்கா, தாவரவியல் பூங்காவில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குழந்தைகள் தாவரவியல் பூங்காவில் உள்ள ரெயிலில் ஏறி உற்சாகமாக பயணம் செய்தனர்.

படகு சவாரி

புதுச்சேரி கடற்கரை, மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புதுச்சேரி பழைய துறைமுகம், தலைமை செயலகம் அருகே உருவாகியுள்ள செயற்கை மணல் பரப்பில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர். நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் இருந்து சுண்ணாம்பாற்றில் படகு சவாரி செய்து பாரடைஸ் பீச்சுக்கு சென்றனர்.

சண்டே மார்க்கெட்

சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் நேற்று காலை முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் அது மேலும் அதிகரித்தது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.

சுற்றுலா பயணிகளின் அதிகபடியான வருகையால் புதுச்சேரி நகர பகுதியில் அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்பட்டதை காண முடிந்தது.


Next Story