கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

புதுச்சேரி கடற்கரையில் வார விடுமுறையான இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில் வார விடுமுறையான இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள்

புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இதேபோல் இன்று புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

புதுவை கடற்கரை, பாண்டி மெரினா பீச், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், அரசு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காலை முதல் அலைமோதியது. அவர்கள் கடற்கரை, பாண்டி மெரினா பீச்சில் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர். சிலர் ஒட்டகம், குதிரைகளில் ஏறி சவாரி செய்தனர்.

சண்டே மார்க்கெட்

ஒய்ட் டவுன் பகுதிகளில் வெளிநாட்டு, வெளிமாநில பெண்கள் நாகரிக உடையணிந்து ஒய்யாரமாக வலம் வந்ததை காண முடிந்தது. அவர்கள் அங்குள்ள கட்டிடங்களில் வரைந்திருந்த ஓவியங்களின் முன்பு நின்று செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதேபோல் காந்தி வீதி சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை பேரம் பேசி வாங்கிச்சென்றனர்.


Next Story