கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

விடுமுறை நாளையொட்டி புதுவை கடற் கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

புதுச்சேரி

விடுமுறை நாளையொட்டி புதுவை கடற் கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தாவரவியல் பூங்கா

புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் இன்று புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அவர்கள் பாரதி பூங்கா, தாவரவியல் பூங்காவுக்கு சென்று பொழுதுபோக்கினர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தாவரவியல் பூங்காவில் உள்ள உல்லாச ரெயிலில் சுற்றுலா பயணிகள் ஏறி உற்சாகமாக பயணம் செய்தனர்.

குதிரை சவாரி

புதுச்சேரி கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச், சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

மாலையில் கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர். பாண்டி மெரினா பீச்சிலும் குதிரை, ஒட்டகங்களில் ஏறி சவாரி செய்து மகிழ்ந்தனர். திடீரென்று மழை பெய்ததால் சிலர் கடற்கரையில் இருந்து கலைந்து சென்றனர்.

சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் காலை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு அவர்கள், தங்களுக்கு வேண்டிய பொருட்களை வியாபாரிகளிடம் பேரம்பேசி வாங்கிச் சென்றனர்.

1 More update

Next Story